இந்தி தேசிய மொழி என்பதா?: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமச்சீர் கல்வி திட்டத்தின்படி வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும்.
இந்த பாடத்தை படிக்கும் மாணவர்கள் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று தவறாக புரிந்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடநூல்களில் பார்த்து பார்த்து திருத்தம் செய்து பல்வேறு பகுதிகளை கடந்த ஆண்டு நீக்கிய அ.தி.மு.க. அரசும் இந்த மிகப்பெரிய வரலாற்று பிழையை கண்டு கெள்ளவோ, திருத்தவோ இல்லை.
இந்தி மொழியை விரட்டியடித்து விட்டதாக மார்த்தட்டிகொள்ளும் திராவிட கட்சிகளின் தமிழ் துரோகமும், இந்தி பாசமும் இதன்மூலம் அம்பலப்பட்டுவிட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications