For Daily Alerts
Just In
எகிப்தில் கொடுமை: பாலியல் கொடுமைக்கு எதிரான பேரணியில் பெண்கள் மானபங்கம்
எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் முபாரக்கின் ஆதரவாளர்கள் போட்டியிட கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உள்ளே நுழைந்த முபாரக் ஆதரவாளர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்..
இதைக் காண்டித்து தக்ரீர் மைதானத்தில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஆண்கள் ஆதரவு வளையம் அமைத்து நின்றனர். ஆனாலும் முபாரக்கின் ஆதரவாளர்கள் அட்டகாசம் தொடர்ந்தது. இதையடுத்து பெண்கள் அங்கிருந்து தப்பியோடி அகதி முகாம்களில் பதுங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
Comments
English summary
A mob of hundreds of men assaulted women holding a march demanding an end to sexual harassment Friday, with the attackers overwhelming the male guardians and groping and molesting several of the female marchers in Cairo's Tahrir Square.
Story first published: Sunday, June 10, 2012, 16:43 [IST]