பெங்களூரில் சிக்கித் தவித்த ஆதீனம் மதுரை திரும்பினார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பெங்களூருக்கு நித்தியானந்தாவுடன் சென்று அங்கு பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மதுரை ஆதீனம் தற்போது மதுரைக்கு திரும்பியுள்ளார். நித்தியானந்தா திடீரென தலைமறைவானதால் பெரும் தவிப்புக்குள்ளாகியிருந்த ஆதீனம் தற்போது மதுரை ஆதீன மடத்திற்குத் திரும்பியுள்ளாராம்.

ஜூன் 5ம் தேதி மதுரை ஆதீனத்திற்கு குரு பூஜை நடத்தினார் நித்தியானந்தா. அவருக்கு கனகாபிஷேகம் செய்தார். இதையடுத்து இருவரும் ஜோடியாக பெங்களூர் போனார்கள். அங்கு பிடதி ஆசிரமத்தில் தங்கினார் மதுரை ஆதீனம்.

இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அது பெரும் கலாட்டாவில் போய் முடிந்தது. இதையடுத்து நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது பத்திரிக்கையாளர்கள் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்னர். இதனால் நித்தியானந்தா மடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

நித்தியானந்தாவை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ளன.இதனால் மடத்திற்குத் திரும்பமுடியாத நிலையி்ல் இருக்கிறார் நித்தியானந்தா.

அவர் மதுரையில் தங்கியிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் உறுதியாகத் தெரியவில்லை. ஓய்வெடுக்க வந்த இடத்தில் பஞ்சாயத்தாகிப் போனதால் தவித்துப் போய் விட்டார் மதுரை ஆதீனம். இந்த நிலையில் தற்போது நித்தியானந்தா ஆலோசனைப்படி அவர் மதுரைக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தனது மடத்திற்கே ஆதீனம் திரும்பி விட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+