அன்னா, ராம்தேவ் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்
Subscribe to Oneindia Tamil
பிவானி: ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்தி வரும் போராட்டங்களை தாம் ஆதரிப்பதாக ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுளதாவது:
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராகப் போராடி வரும் அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் நாட்டுக்காக போராடி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் பிரச்சனைகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். நானும் ஆதரவு தெரிவிக்கிறேன்.
ஊழலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்பது நல்லதுதானே.. ஆனால் அவர்களுடன் இணைவது பற்றி எந்த ஒரு முடிவையும் நான் எடுக்கவில்லை. பொதுவாக எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications