அவர் ஓடிப் போகலே, வந்துடுவார்... மதுரை ஆதீனம்

Subscribe to Oneindia Tamil

Madurai Aadheenam
மதுரை நித்தியானந்தா எங்கேயும் ஓடிப் போகவில்லை, பெங்களூரில்தான் இருக்கிறார். இன்று அல்லது நாளை அவர் மதுரை வருவார் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டுள்ள லேட்டஸ்ட் பிரச்சினை குறித்து அவர் தரப்பில் செய்தி தர அவரது 'பிஆர்ஓ' என்று யாரும் இல்லை. அனைவரும் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சார்பில் மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பிடதி ஆசிரமத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நித்தியானந்தாவுடன் நானும் அமர்ந்து இருந்தேன். அப்போது செய்தியாளர் போர்வையில் ஒரு நபர் ஊடுருவி நித்தியானந்தாவை கோபப்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினார்.

அப்போது தன்னிடம் ஒரு சம்மன் இருப்பதாக கூறிய அந்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நேரத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நித்தியானந்தா பெங்களூரில்தான் இருக்கிறார். அவர் தலைமறைவாகவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. நித்தியானந்தாவின் தியான பீடங்கள் பெங்களூர் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த தியான பீடங்கள் அவரது தனிப்பட்ட சொத்தாகும். அவரது உழைப்பால் ஆன்மிக பணியால் உருவாக்கப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது.

கர்நாடக அரசு நித்தியானந்தாவின் தியான பீடத்தை கைப்பற்றபோவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அரசு இதில் தலையிட முடியாது. தியான பீட சொத்துக்களை அரசு கையகப்படுத்த எந்த சட்டத்திலும் இடம் இல்லை.

மதுரை ஆதீன நியமனத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எங்களை எதிர்ப்பவர்கள் விரைவில் ஆதரவாளராக மாறுவார்கள். பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா இன்று மாலை அல்லது நாளைக்குள் மதுரை திரும்புவார் என்றார் ஆதீனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+