காய்கறி விலை கிடுகிடு: பர்சைத் தடவும் சைவப் பிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

Vegetables
நெல்லை: ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதியில் காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளது.

நெல்லை மேற்கு மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் இரண்டும் முக்கிய காய்கறி மார்க்கெட்டுகளாக திகழ்கின்றன. இந்த மார்கெட்டிலிருந்து தினமும் கேரளாவுக்கு சராசரியாக 50 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து மார்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் கேரட்,பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகிய காய்கறிகள் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

கோடை காலம் என்பதால் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. மேலும் பீன்ஸ், அவரை உள்ளிட்டவை கிலோ ரூ.60ஐ தாண்டிவிட்டது. மூட்டைகோஸ் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. மல்லி இலை ரூ.50க்கும், உள்ளி விலை ரூ.40க்கும் உயர்ந்துவிட்டது. கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை ஆகியவை உள்ளூரில் பயிரிடப்பட்டாலும் மற்ற காய்கறிகள் விலைகள் உயர்ந்ததால் பொதுமக்கள் இந்த மூன்றையும் அதிகமாக கேட்பதால் அவைகளின் விலையும் ரூ.30க்கு மேல் உயர்ந்துள்ளது.

உருளைக்கிழக்கு, சேனைக்கிழங்கு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. சீனி அவரைக்காய், பூசனி, புடலை, மாங்காய், முருங்கை ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.20க்கு கிடைக்கின்றன. இதனால் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் கூடுதல் காய்கறி செலவை எதில் சரிகட்டுவது என திகைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+