ஜனாதிபதி வேட்பாளர்-பாஜக கூட்டத்தைப் புறக்கணித்து சென்னை கிளம்பிய அத்வானி

இன்று மாலை பாஜக நிர்வாகிகள் கூடி குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். மமதா பானர்ஜி, சோனியாவையும், முலாயம் சிங்யாதவையும் சந்தித்துள்ளமுக்கியமான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதில் அத்வானி பங்கேற்கவில்லை. மாறாக எம்.பிக்களுடன் சென்னைக்குக் கிளம்பி விட்டார். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
சென்னை பயணம் ஏன்?
2 நாள் பயணமாக சென்னைக்குக் கிளம்பியுள்ளார் அத்வானி. அவருடன் 15 பேர் கொண்ட எம்.பிக்ள் குழுவும் வருகிறது. இவர்கள் கல்பாக்கம் அணு மின் நிலையம், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனங்களை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்த பயணத்தின்போது அவர்கள் சாலை மார்க்கமாக செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, அத்வானி ஹெலிகாப்டர் மூலம் பயணிப்பார். பாதுகாப்பு காரணங்களுக்காக அத்வானி சாலை மார்க்கமாக செல்ல மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications