2 ஆண்டுகளில் 2வது முறையாக சிறைக்குச் செல்லும் நித்தியானந்தா!
பெங்களூர்: நித்தியானந்தா 2 ஆண்டுகளில் 2வது முறையாக சிறைக்குச் செல்கிறார். ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கடந்த 2010ம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அடிதடி தாக்குதல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போகிறார்.
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு வீடியோ படம் ஒளிபரப்பானது. அதில் நித்தியானந்தாவும், ஒரு நடிகையும் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டத்தையும், வழக்கையும் சந்திக்க முடியாமல் நித்தியானந்தா தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வந்த போலீஸார், ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஏப்ரல் 21ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் அர்கி என்றஇடத்தில் வைத்து சிக்கினார்.
இதையடுத்து அவர் ராம்நகரம் கொண்டு வரப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2010ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ஜாமீன் கிடைத்தது.
முதல் முறையாக சிறை சென்ற நித்தியானந்தா 52 நாட்களை சிறையில் கழித்தார்.
இந்த நிலையில் தற்போது 2வது முறையாக சிறைக்குச் செல்லும் நிலை நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை அடிதடி தாக்குதல் வழக்கில் அவர் சிக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications