For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றைய இரவை ராம்நகர் கிளைச் சிறையில் கழிக்கிறார் நித்தியானந்தா!

Google Oneindia Tamil News

Nithyanantha
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ராம்நகர் கிளைச் சிறையில் நித்தியானந்தாவை ஒரு நாள் அடைக்க ராமநகர மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை அங்கு போலீஸார் அடைக்கிறார்கள். நாளை மறுபடியும் அவரை கோர்ட்டில் ஆஐர்படுத்துகிறார்கள்.

பெங்களூர் அருகே பிடதி ஆசிரமத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள், நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதலைத் தொடர்ந்து போலீஸார் தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தா தலைமறைவாக இருந்து வந்தார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து நித்தியானந்தா ராம்நகர மாவட்ட நீதிமன்றத்தில் திடீரென வந்து சரணடைந்தார்.

அவரை ஒரு நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாளை அவரை சிறையில் அடைக்கவும், நாளை மீண்டும் ஆஐர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராம்நகர் கிளைச் சிறையில் நித்தியாந்தாவை போலீஸார் அடைக்கவுள்ளனர். எனவே இன்று இரவுப் பொழுதை ராம்நகர் கிளைச் சிறையில் கழிக்கவுள்ளார் நித்தியானந்தா.

English summary
Nithyanantha will spend this night at Ramanagara prison after the court ordered to lodge him in prison for one day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X