நித்தியானந்தா ஆசிரமத்தில் 4 அறைகளுக்கு சீல் வைப்பு!
Subscribe to Oneindia Tamil

ராம்நகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம் ரெட்டி, துணை கலெக்டர் அர்ச்சனா, எஸ்.பி. அனுபவ் அகர்வால் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ஏராளமான கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், சிடிக்கள் உள்ளிட்டவை சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரமத்திற்குள் உள்ள நான்கு முக்கிய அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரமக் கணக்குகளை சரி பார்க்கவும், அதில் உள்ள கோல்மால்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications