தமிழகம் முழுக்க திராவிட மாயையை நீங்கச் செய்யும் டாக்டர் ராமதாஸ்
தமிழ் மொழி, இனம், தமிழன் அடுத்து செய்ய வேண்டியது, அரசியல் நாகரீகம், மது ஒழிப்பு, ஜாதிப் பிரச்சனை, ஆதாய தேர்தல், இலங்கை இறுதி கட்ட போர், திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள், இடைத்தேர்தல் போன்ற திராவிட கட்சிகளின் மாயைகள் குறித்து விரிவாக பிரச்சாரம் செய்ய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், கிராமங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் திராவிட மாயை குறித்து முழக்கம் செய்ய உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த பிரச்சார இயக்கம் துவங்கிய நிலையில், தற்போது மற்ற பகுதிகளை நோக்கி பயணிக்க உள்ளார்.
இந்த நிலையில் வரும் 21ம் தேதி கரூரில் பாமக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வரும் டாக்டர் ராமதாஸ் காவல் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஹேமலாவில் திராவிட மாயை குறித்து கருத்தரங்கம் நடத்த உள்ளார். அப்போது திராவிடம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை வெளியிடப் போகின்றாராம்.