அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் மட்டுமே போட்டி: அப்துல் கலாம் திட்டவட்டம்

ஆனால், இது குறித்து அப்துல் கலாமிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் வெளிவரவில்லை.
பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு வென்றார் கலாம். ஆனால், அடுத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்தியை பிரதமராக கலாம் விடவில்லை. அவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் அதை கலாம் அனுமதிக்கவில்லை. அதிலிருந்தே காங்கிரஸ்-கலாம் இடையே நல்லுறவு இல்லை.
இந் நிலையில், கலாமின் பதவிக் காலம் முடிந்தபோது மீண்டும் அவரையே நிறுத்தலாம் என பாஜக கூட்டணி கூறியது. ஆனால், கலாம் முதலில் அமைதி காத்தார். பின்னர் மீண்டும் போட்டியிடத் தயார் என்று அறிவித்தார்.
ஆனாலும், அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்ட காங்கிரஸ் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதியாக்கியது.
இந் நிலையில் மீண்டும் கலாமின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே இவரது பெயரை முலாயம் சிங்கும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறி வந்தனர். பாஜக, அதிமுகவும் கூட கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்றன. திமுகவும் இதையே கூறியது.
ஆனால், கலாமுக்கு காங்கிரசின் ஆதரவு இல்லை என்பது நிச்சயமானவுடன் திமுக அமைதி காக்கத் தொடங்கியது. ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திடீரென முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்தனர்.
இந் நிலையில் தான் மீண்டும் கலாமின் பெயர் முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் பேசிய முலாயம் மற்றும் மம்தாவிடம், எனக்கு அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கலாம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரசின் ஆதரவு அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்ற நிலையில், கலாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது மிக மிக அரிதே.
-
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications