ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைப் புறக்கணித்தது சிவசேனா
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான மிகவும் முக்கியமான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா? எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது போட்டியிட உள்ள சங்மாவை ஆதரிப்பதா? என்பது குறித்து இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பான கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பாஜகவின் மிக முக்கியமான கூட்டணிக் கட்சியான சிவசேனா பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் பால்தாக்கரேதான் இறுதி முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
அனேகமாக சிவசேனாவே ஒரு வேட்பாளரை நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக சார்பில் பைரோன்சிங் செகாவத்தை பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் முடிவெடுத்த போது மஹாராஷ்டிரா மாநிலத்தவர் என்பதற்காக பிரதீபா பாட்டீலை சிவசேனா ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications