எனக்கு ஆதரவு அளியுங்கள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பி.ஏ. சங்மா கோரிக்கை

இது தொடர்பாக சங்மா கூறியுள்ளதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் கூடி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது. என்னை ஆதரிக்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்கு முன்பும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பலரும் என்னிடம் பேசினர்.
நான் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடவில்லை. பழங்குடி இன மக்களின் சார்பாகவே போட்டியிடுகிறேன். என்னை போட்டியிலிருந்து விலகுமாறு சரத்பவார் கூறியதாகக் கேள்விபட்டேன். நான் அவருக்குக் கூறுவதெல்லாம் என்னை ஆதரியுங்கள் என்பதுதான் என்றார்.
இதனிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியையும் தொடர்பு கொண்டு தம்மை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை அப்துல்கலாம் போட்டியிட்டால் தமக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள் என்றும் மமதாவிடம் சங்மா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications