ராஜஸ்தான்: பல ஆண்களுடன் தொடர்பு- திருமணமான மகளின் தலையை துண்டித்த தந்தை
ஜெயப்பூர்: ராஜஸ்தானில் கணவரைப் பிரிந்த மகள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை பொறுக்க முடியாத தந்தை வாளை எடுத்து மகளின் தலையைத் துண்டித்துக் கொன்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒகாத். அவரது மகள் மஞ்சு(20). அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் வாழாமல் வந்துவிட்டார். அவர் தனது தந்தையுடன் துங்கர்ஜி கா குடா கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கணவரைப் பிரிந்த மஞ்சுவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை தந்தை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் ஒரு ஆணுடன் இருக்கையில் சிக்கினார். இனியும் மகள் திருந்தவே மாட்டாள் என்ற முடிவுக்கு வந்த ஒகாத் நேற்று மாலை வீட்டில் இருந்த மஞ்சுவை வாளால் வெட்டிக் கொன்றார். இதில் மஞ்சுவின் தலையும், உடலும் தனித்தனியானது. பின்னர் மஞ்சுவின் தலையை ஒரு கையிலும், ரத்தம்படிந்த வாளை ஒரு கையிலும் எடுத்துக் தொண்டு கெல்வா காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒகாதை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications