நைஜீரியாவில் 3 சர்ச்கள் மீது இஸ்லாமிய அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்: 52 பேர் பலி
ஜாரியா: நைஜீரியாவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு போகோ ஹரம் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் ஜாரியா நகரில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கடுனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல்களில் 52 பேர் பலியாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு போகோ ஹரம் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கிறிஸ்தவர்கள் மசூதிகளை சூறையாடி அவற்றுக்கு தீ வைத்ததற்கு பழிக்குப் பழி வாங்கவே தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் நடந்த பிறகு கடுனாவில் இருந்த அபுஜா செல்லும் நெடுஞ்சாலையை கிறிஸ்தவ இளைஞர்கள் மறித்துக் கொண்டு அந்த வழியாக சென்ற கார்களில் இருந்த முஸ்லிம்களை வெளியே இழுத்துக் கொன்றதாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
போகோ ஹரம் இஸ்லாமியர்களுக்கு என்று தனி மாநிலம் கோரி தேவாலயங்கள், பொது இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் வழங்கப்படாததால் அந்த அமைப்பு அரசியல் தலைவர்களையும் கொலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications