ஆக மொத்தம் இதுவரை 23 கட்சிகள் பிரணாப்புக்கு ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை. பி.ஏ.சங்மா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அப்துல் கலாம் போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் போட்டியிட மாட்டேன் என்று கூறி விட்டதால் பிரணாப் முகர்ஜியின் கை வேகமாக ஓங்கி விட்டது. அப்துல் கலாம் போட்டிக் களத்தில் இல்லாததால் தேர்தலே சப்பென்று போய் விட்டது.
இப்போதைக்கு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும், இல்லாவிட்டால் சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்ற இரட்டை நிலை மட்டுமே அனைத்துக் கட்சிகள் முன்பும் உள்ளது.
எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய் விட்டதால் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உற்சாகமாக உள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு கூடி வரும் ஆதரவை அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை அவருக்கு 23 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனவாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அத்தனை பேருமே மாறுபட்ட கருத்துடன் உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், திரினமூல் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன
சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா என பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது தெலுங்கு தேசமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல இடதுசாரிகள் நாளை கூடி தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளனர். கட்டக் கடைசியாக பாஜக கூட்டணி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி பிரணாப் முகர்ஜி பெரிய அளவிலான வெற்றியைப் பெறுவார் என்ற நிலையே காணப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications