ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் சிபிஐ இன்றும் விசாரணை
Subscribe to Oneindia Tamil

ஆந்திர முதல்வராக ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில் தங்களது சிமெண்ட் நிறுவனங்களுக்கான ஆற்று நீரை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் இதற்கு பிரதிபலனாக ஜெகன் மோகனின் நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் சிமெண்ட் நிறுவனங்கள் மீது சி.பிஐ. புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவன தலைவர்களிடம் கடந்த திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. சீனிவாசனிடம் இந்த விசாரணை 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications