தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம்: பீடித் தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
நெல்லை: பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடக் கோரி தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம், பஞ்சப்படி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக 12.10.2010ல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
முத்தரப்பு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வை குறைந்தபட்ச ஊதியமாக அறிவிக்க கடந்த கால நடைமுறையின் படி 28.2.2011 அன்று முதனிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்து இறுதி அறிவிப்பு வெளியிட வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய இறுதி அரசாணை வெளியிட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை.
ஏப்ரல் மாதம் 17ம் தேதி தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தின்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் 18ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஒரு மாதத்திற்குள் உரிய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊதிய உயர்வு அரசாணை வெளியிட மறுக்கும் த்மிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது என்றார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications