சென்னையில் ராமதாஸ் தலைமையில் நாளை பாமக மாநில செயற்குழு கூட்டம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் நாளை(26ம் தேதி) சென்னை வியாசர்பாடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூர் வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஜானகி மஹால் அரங்கில் ஜூன் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பாமக தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக அதிவேகம் காட்டி வரும் சிபிஐ, பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை கைது செய்தது. இதனால் இந்த கூட்டத்தில் (திமுக பாணியில்- கனிமொழி கைது விவகாரம்) சிபிஐக்கு கண்டனம் தெரிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications