'சபாஷ் சலேம்'...அபு சலேமுக்கு பாராட்டுடன் ஜாமீனையும் வழங்கிய டெல்லி கோர்ட்!
டெல்லி: போர்ச்சுகல் நாட்டிலிருந்து நிபந்தனையுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் நிழல் உலக தாதா அபு சலேமுக்கு டெல்லி கோர்ட் ஒன்று, சிறையில் அவர் சிறந்த நன்னடத்தையுடன் திகழ்வதாக பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு கடத்திப் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனும் அளித்துள்ளது.
இருப்பினும் சலேம் மீது மேலும் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
கடந்த 2002ம் ஆண்டு ஒருவரைக் கடத்தி வைத்து பணம் பறித்ததாக சலேம் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை அணுகினார் சலேம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத்யாதவ், சலேமுக்கு ரூ. 1 லட்சம் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகையிலான ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும் சலேம் மீது மேலும் ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில்தான் இருக்க வேண்டும்.
நீதிபதி தனது உத்தரவின்போது சலேமைப் பாராட்டவும் செய்தார். அவர் கூறுகையில், இந்த வழக்கில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டார் சலேம். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்தாலும் கூட 7 வருடங்கள் கிடைக்கலாம்.
ஒரு வழக்கில் ஒரு குற்றவாளிக்கு அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அதில் பாதி ஆண்டுகளை அவர் சிறையில் கழித்து விட்டால் ஜாமீன் தரலாம் என்று சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில் சலேமுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.
மேலும் சிறையில் நல்ல நன்னடத்தையுடன் சலேம் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது. குற்றம் சாட்டப்பட்ட சலேம் மீது இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என்றார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் அபு சலேம். பல காலமாக தலைமறைவாக இருந்து வந்த அவரை போர்ச்சுகல் நாட்டிலிருந்து சிபிஐ அதிகாரிகள்நாடு கடத்திக் கொண்டு வந்தனர். ஆனால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது என்று போர்ச்சுகல் நாட்டு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications