எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இனி திண்டிவனத்திலும் நின்று செல்லும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இனி திண்டிவனத்திலும் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பேரில் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்கள் 16853/16854) திண்டிவனத்தில் தற்காலிமாக நின்று செல்லும்.

இந்த ரயில் வரும் ஜூலை 10ம் தேதி முதல் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு மட்டுமே திண்டிவனத்தில் நின்று செல்லும்.

இதே போன்று சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண்கள் 56037/56038) தற்காலிகமாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூலை 10ம் தேதி முதல் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+