வரதட்சனை கொடுமை: இந்திய பெண்ணுக்கு கனடாவில் வசிக்கும் கணவர் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவு
டெல்லி: மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொமைப்படுத்திய கனடா வாழ் இந்தியரை, மாதந்தோறும் ரூ.33,000 ஜீவானம்சம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் பெற்றோருடன் வசித்து வருபவர் இந்தியர் புனித். கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து சென்ற புனித், அவரை அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி புனித் உடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புனித் வீட்டார் கேட்ட வரதட்சனை முழுமையாக அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த 2 வாரங்களில் புனித் மீண்டும் கனடாவிற்கு சென்றுவி்ட்டார்.
அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு, நான் கனடா செல்ல விசா அனுப்பினார். நான் கனடாவிற்கு சென்ற உடன் புனித் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். புனித் வீட்டார் என்னை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் புனித் என்னை தனது மனைவியாக ஏற்று கொள்ளாமல், கனடாவை சேர்ந்த ஒரு பெண் உடன் தகாத உறவு கொண்டிருந்தார்.
கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் எனக்கு கணவர் புனித் எந்த உதவியும் அளிக்க மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட புனித் அரோரா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொண்டு, தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.33,000 வீதம் ஜீவானம்சம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications