ஒடிஸ்ஸா 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஆசாமிகள்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே ஃபேஸ்புக்கில் ரிலீஸ் ஆனதால் ஷாக்கிக் கிடக்கிறது மாநில கல்வித் துறை.
ஒடிஷா மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்டிருந்தது. ஆனால் நெற்று இரவே டாப் ரேங் பெற்ற 110 மாணவர்களின் பட்டியல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ரிலீஸ் ஆனது கல்வித் துறையை அதிர்ச்சியடை வைத்தது.
இன்று காலை வெளியான அதிகாரபூர்வ ரிசல்ட்டில் ஃபேஸ்புக்கில் வெளியான ரிசல்ட் அப்படியே இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக மாநில கல்வித் துறை தலைவர் சத்யகம் மிஸ்ரா கூறுகையில், இது தேர்வு முடிவுகள் கசிவில்லை.. தேர்வு முடிவுகள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications