சுர்ஜித் சிங் விடுதலை, அப்போ சரப்ஜித் சிங்?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகிவிந்த் கிராமத்தைச் சேர்நதவர் சரப்ஜித் சிங்(45). கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 உயிர்களை காவு வாங்கிய வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாகக் கூறி சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டர். தீவிரவாத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கடந்த 20 வருடங்களாக தூக்குக் கயிற்றுடன் போராடி வருகிறார் சரப்ஜித் சிங். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இரு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் போராடி வருகின்றன. இந்தியத் தலைவர்களும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இது குறித்து கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.
கடந்த மாதம் சர்தாரிக்கு புதிதாக ஒரு கருணை மனுவையும் அனுப்பியிருந்தார் சரப்ஜித் சிங். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பாகிஸ்தான் ஊடகங்களில் சரப்ஜித் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்று செய்தி வெளியானது. இதனால் இரு நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் மகிழ்ச்சி அலை வீசியது.
இதைக் கேட்ட சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இனிப்புகளை உற்றார், உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஐந்து மண நேரம் இந்த செய்தி நீடித்தது. இரு நாட்டு டிவி சேனல்களிலும் சரப்ஜித் சிங் குறித்த செய்திகளே தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமை இரவுக்கு மேல் பாகிஸ்தான் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் புதிய குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் கூறுகையில், விடுதலை செய்தி குறித்து ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. முதலில், இது அதிபர் வழங்கிய மன்னிப்பு அல்ல. அடுத்து, விடுதலை செய்யப்படவுள்ளவர் சரப்ஜித் சிங் அல்ல, சுர்ஜித் சிங் என்ற கைதிதான் விடுவிக்கப்படவுள்ளார் என்றார்.
இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தார் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தனர். சரப்ஜித்தை பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கையை முன்வைத்து நேற்று ஜலந்தரில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர். இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கூடிய சரப்ஜித் சிங் குடும்பத்தார் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அறிவித்தபடி சுர்ஜித் சிங் இன்று காலை லாகூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தார். அவருக்கு இந்திய எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
30 ஆண்டுகள் கழித்து தாய்நாட்டு மண்ணை மிதி்த்துள்ள சுர்ஜித் சிங் கூறுகையில்,
30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி. பாகிஸ்தான் சிறையில் என்னை யாரும் தரக்குறைவாக நடத்தவில்லை. இனி பாகிஸ்தான் பக்கமே செல்ல மாட்டேன். மீண்டும் சென்றால் வேறு ஏதாவது வழக்கை போட்டு சிறையில் அடைத்துவிடுவார்கள்.
பாகிஸ்தான் ஊடகங்கள் எப்பொழுதுமே சரப்ஜித் சிங்கிற்கு எதிராகவே உள்ளன. நான் விடுதலையாகும் முன்பு சரப்ஜித் சிங்கை பார்க்க எனக்கு அனுமதி அளிக்கவில்லை. சரப்ஜித் சிங்கை விடுவிக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன் என்றார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications