For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன்

By Mathi
Google Oneindia Tamil News

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வயலூரை சேர்ந்த சண்முகத்தின் மகன் தட்சிணாமூர்த்தி அருகெ உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தட்சிணாமூர்த்தி விடுதியை அடுத்துள்ள வகுப்பறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர்களும் சக மாணவர்களும் தட்சிணாமூர்த்தியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் மர்ம சாவுக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று கூறி உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

English summary
Plus 2 student who was found hanging from the ceiling fan of his School hostel room in Virduchalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X