தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நள்ளிரவில் கொடுந்தாக்குதலை நடத்தியிருக்கிறது.
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அண்மையில் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்துவதை நாள்தோறும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தது. இந்நிலையில் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை மீண்டும் விரட்டித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் தொடர்ந்தும் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ராஜபக்சே கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி இலங்கை கடற்படை எச்சரித்திருக்கிறது. இதனால் மீனவர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி கரைசேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications