ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழ்அழகன் . இவரது மகன் பெண்ணாடம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவன் தனது நண்பர்களுடன் இறையூர் வெள்ளாற்றங்கரை அருகிலுள்ள வயல் அருகே உள்ள மரவள்ளிக் கிழங்கை பறித்து தின்றுள்ளான். இதைக் கண்ட நிலத்தின் உரிமையாளரான மகாராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.
இதனை அறிந்த தமிழ்அழகன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இறையூரில் உள்ள மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து, அவரைத் அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்று விட்டனர். இதனை கண்டித்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறையூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல எம்.எல்.ஏ. மகனை தாக்கிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகிகள் பெண்ணாடம் காவல் நிலையம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. மகன் மற்றும் அவரது நண்பர்களை பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்திற்குள் சென்ற தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்துவோம் என்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தாகவும் போலீஸ் பாதுகாப்பில் இருந்த இருவரையும் அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் அவரது மகன், நண்பர் உள்ளிட்ட 30 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல, இன்ஸ்பெக்டர் மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications