தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம்
ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன.
இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியட்நாம் தலைநகர் ஹனோயிஸ் சீன தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஹனோய் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சீன தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்று கண்டனம் தெரிவித்தனர்.
சீனாவுக்கு எதிராக அண்டைநாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தென்சீனக் கடற்பரப்பில் பதற்றத்தையே அதிகரிக்கச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications