26/11 தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு 40 இந்தியர்கள் உதவினார்கள்- பாகிஸ்தான் குண்டு
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு குறைந்தது 40 இந்தியர்கள் உதவியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல்களை நடத்த முக்கிய மூளையாக செயல்பட்ட ஜபியுத்தீன் அன்சாரி(எ) அபு ஜுன்டால் கடந்த வாரம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். இந்நிலையில் மும்பை தாக்குதல்கள் நடத்த குறைந்தது 40 இந்தியர்கள் உதவியதாக பெயர் தெரிவிக்க விரும்பாத பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்களின் சந்திப்பு டெல்லியில் நடக்கிறது. அப்போது அபு ஜுன்டாலின் கைது விவகாரம் குறித்த தகவல்களை அளிக்குமாறு பாகிஸ்தான் இந்தியாவை வலியுறுத்தும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜுன்டால் கைது குறித்து இந்தியா எங்களுக்கு இதுவரை எந்தவித தகவலும் அளிக்கவில்லை. இந்தியர்களின் துணையில்லாமல் மும்பையில் தாக்குதல்களை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துக் கொண்டே தான் இருந்தது. மும்பை தாக்குதல்கள் விசாரணை குறித்த முழு தகவல்களை கொடுக்க இந்திய அதிகாரிகள் தயங்குகிறார்கள். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிக் கமிஷன் இந்தியா வந்தபோது சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. விசாரணை குறித்த தகவல்களை இந்தியா அளித்தால் தானே பாகிஸ்தான் ஒரு முடிவு எடுக்க முடியும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications