சிறை நிரப்ப திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் சேலத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பிய திமுகவினரை சேலம் போலீஸார் வழி மறித்துக் கைது செய்து கொண்டு சென்றனர்.
சேலத்தில் 9 இடங்களில் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தலைமையில் போராட்டம் நடந்தது.
போராட்டம் 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட காலையிலேயே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீஸார் ஆங்காங்கே வழிமறித்துக் கைது செய்தனர்.
சேலத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications