ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்க அன்னா குழுவுக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil

வலுவான லோக்பால் மசோதா கொண்டு வராததற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கண்டித்து அன்னா குழுவினர் வரும் 25ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க டெல்லி போலீசாரிடம் அனுமதி கோரினர்.
இது குறித்து போலீசார் அன்னா குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் போலீசார் கூறியிருப்பதாவது,
ஜந்தர் மந்தரில் ஆண்டு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ள சமயத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்பதால் பலரும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வருவார்கள். அதனால் உங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது.
வேண்டும் என்றால் வேறு ஒரு இடத்தில் போராட்டம் நடத்துவது குறித்து நீங்கள் எங்களை அணுகலாம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications