அரசு பள்ளியில் பெரியார் சிலை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் உருவ சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

காவேரிபட்டினம் அரசு பள்ளியில் தந்தை பெரியார் சிலை வைக்க கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கல்வித் துறை இணை செயலாளர் பெரியார் சிலை நிறுவ 2010-ம் ஆண்டு தடை விதித்தார்.

இம்மனுவை நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் பெரியார் சிலை வைக்க அரசு அதிகாரி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 2009-ம் ஆண்டு அரசு அனுமதியின்படி பெரியார் சிலையை நிறுவவும் பெரியார் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+