அரசு பள்ளியில் பெரியார் சிலை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் உருவ சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
காவேரிபட்டினம் அரசு பள்ளியில் தந்தை பெரியார் சிலை வைக்க கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கல்வித் துறை இணை செயலாளர் பெரியார் சிலை நிறுவ 2010-ம் ஆண்டு தடை விதித்தார்.
இம்மனுவை நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் பெரியார் சிலை வைக்க அரசு அதிகாரி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 2009-ம் ஆண்டு அரசு அனுமதியின்படி பெரியார் சிலையை நிறுவவும் பெரியார் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications