இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை செய்ய நடவடிக்கை- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் சிறை பிடிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் 5 பேர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, இன்னும் சிறையில் வாடுகின்றனர்.
எனவே இலங்கை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications