திருமலையில் இனி பேட்டரிகார்கள் மட்டுமே! - தேவஸ்தானம் புது முடிவு
திருப்பதி : சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இனி திருமலை மீது பேட்டரி வாகனங்களை மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து தருகிறது. ஏழுமலையான் கோவிலில் அமைந்துள்ள திருப்பதி மலையில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க விரைவில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை மட்டுமே திருப்பதி மலையில் அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிர மணியம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
திருமலையில் அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இப்பணி முடிவடைந்த பிறகு திருமலையில் பேட்டரியுடன் இயங்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நெடுஞ்சாலை வழியாக திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். அவர்கள் வரும் வழியில் தங்குவதற்கு வசதியாக நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ. தூரத்திற்கு ஒரு தங்கும் விடுதி அமைக்கப்படும். ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மேலும் பல சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications