காதல் கான்ஸ்டபிளை ஒரே குத்தில் குத்திக் கொன்ற சிறுமி!!!
டெல்லி: டெல்லியில் சிறுமி ஒருவர், தனது காதலனான போலீஸ் கான்ஸ்டபிளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.
குத்திக் கொல்லப்பட்ட அந்த கான்ஸ்டபிளின் பெயர் அனில் குமார். 23 வயதாகிறது. இவர் பரீதாபாத்தைச் சேர்ந்த 18 வயது கூட நிரம்பாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் அந்த சிறுமியுடன் அவர் தனிமையில் இருந்துள்ளார். அப்போது ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி, அனில்குமார் சற்றும் எதிர்பாராத நிலையில் கத்தியால் குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த அனில்குமார் மரணமடைந்தார்.
கைது செய்யப்பட்ட அந்த சிறுமியை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளை குத்திக் கொன்ற சம்பவம் டெல்லியை நடுநடுங்க வைத்துள்ளது.