அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல்.. தயாராகுங்கள்: சமாஜ்வாதி கட்சியினருக்கு முலாயம் உத்தரவு

முலாயம்சிங் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. ஏறத்தாழ 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்குத் தயாராக கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்
மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளைக் கைப்பற்றி தமது வலுவை நிரூபிக்க வேண்டும் என்று கட்சியினரை முலாயம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை தொகுதிகளில் பிரச்சாரம் செய்யுமாறும் கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். உத்தரப்பிரதேசத்தின் 58 தொகுதிகளில் 58 பார்வையாளர்களையும் நியமித்து கடந்த தேர்தலில் தோற்றுப் போன தொகுதிகளில் பிரச்சனைகளைக் கண்டறிந்து பணி அவற்றை சரி செய்யவும் முலாயம் வலியுறுத்தியிருக்கிறார்.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். தற்போதைய நிலவரப்படி மக்களவையில் சமாஜ்வாதி கட்சிக்கு 22 இடங்கள் இருக்கின்றன.
2014-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது என்பதை முலாயம்சிங் யாதவின் உத்தரவு வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications