Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடகள வீராங்கனை பிங்கி பிராமானிக் 25 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிப்பு!

Subscribe to Oneindia Tamil

Pinki Pramanik
கொல்கத்தா: பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமானிக், 25 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமினிக். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இந்த நிலையில் இவருடன் 2 ஆண்டுகளாக வசித்து வந்த 30 வயது பெண் ஒருவர், பிங்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அவர் ஒரு ஆண் என்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் 14ம் தேதி பிங்கியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கின் விசாரணையில் பிங்கிக்கு பாலின சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக பிங்கிக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையின் போது, மறைமுகமாக எடுக்க வீடியோ இணையதளத்தில் வெளியானது.

இதனால் பிங்கிக்கு ஆதரவாக பல பொது அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் களத்தில் இறங்கின. இந்த நிலையில் பிங்கியின் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரங்களில் மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த பிங்கியின் தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பிங்கியின் மனுவை ஏற்று கொண்ட பராசத் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது. முன்னதாக பிங்கியின் பாலின சோதனையின் அறிக்கை நேற்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+