இதுவரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என பார்த்தது கிடையாதே... கருணாநிதி

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மரபுகளை மீறும் வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தென்னகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தாமல் புறக்கணித்துள்ளது குறித்துக் கேட்ட கேள்விக்குத்தான் இப்படிப் பதிலளித்தார் கருணாநிதி.
மேலும் அவரிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உங்களது கேள்விக்கு அளித்துள்ள பதில் குறித்து உங்களது கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிறுதாவூர் நிலப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்கினார் என்று கேட்டிருக்கிறார். ஜெயலலிதா, நீதிமன்றத்தில் தடை வாங்கியதுதான் திமுக ஆட்சியின் போது தயங்கியதற்கு காரணம் என்றார் கருணாநிதி.
திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நெருங்கி வருவது போல தெரிந்தது. ஆனால் தற்போது மோதல் அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு, ராமகிருஷ்ணன்கள் நெருங்கி வர விட மாட்டார்கள் என்று சிரித்தபடி கூறினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications