பீகாரில் லாலு பிரசாத் யாதவ் உறவினர் பப்பு யாதவ் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உறவினர் பப்பு யாதவ மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மச்சான் சுபாஷ் யாதவின் மச்சான் பங்கஞ் யாதவ்(எ) பப்பு யாதவ். அவர் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள திகா கால்வாய் அருகே நேற்று பப்பு யாதவ் பிணமாகக் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று பிணத்தை கால்வாய் அருகே போட்டுச் சென்றுள்ளனர். மேலும் பப்புவின் டிரைவர் பப்லுவின் உடல் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பப்புவின் வீட்டில் கிடந்தது.

மர்ம நபர்கள் யாரோ பப்புவின் வீட்டுக்குள் புகுந்து டிரைவரைக் கொன்றுவிட்டு பின்னர் பப்புவை கடத்திச் சென்று, சுட்டுக் கொன்று உடலை திகா கால்வாய் அருகே போட்டுச் சென்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.

அந்த இருவரும் கடந்த திங்கட்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக டி.எஸ்.பி. விவேகானந்த் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+