தங்கம், விலை உயர்ந்த கற்களால் இந்திய கொடியை செய்த பாகிஸ்தானியர்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கலிம் ஷெஹர்யார். பொற்கொள்ளர். அவர் உலக சமுதாயத்திற்கு சமாதான செய்தி அனுப்ப இந்தியா, பாகிஸ்தான், சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளை தங்கத்தில் செய்து அதில் விலை உயர்ந்த கற்களை பதித்துள்ளார்.
தான் செய்த கொடிகளை இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய ஊடக கிளப்பில் பார்வைக்காக நேற்று வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உலக அரங்கில் பாகிஸ்தான் பற்றி மென்மையான இமேஜை உருவாக்கவும், உலக நாடுகளுக்கு அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய செய்திகளை தெரிவிக்கும் வகையிலும் நான் பல்வேறு நாடுகளின் கொடிகளை தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை பயன்படுத்தி செய்துள்ளேன். இந்த கொடிகளை செய்து முடிக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான் செய்துள்ள கொடிகளை வைத்து அடுத்த மாதம் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் இந்த கொடிகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ராவல்பிண்டியில் மருத்துவமனை துவங்க உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications