நிதியமைச்சர், மக்களவை காங் தலைவர் பதவிகளுக்கு ப.சிதம்பரம்- ஏ.கே.ஆண்டனி இடையே கடும் போட்டி!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் நம்பர் டூ பதவியாகப் பார்க்கப்படும் நிதியமைச்சர் பதவிக்கு ஏ.கே.ஆண்டனியும் போட்டி போட ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பதவிக்கு மத்திய அமைச்சர்கள் கமல் நாத், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
ஆனால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையே மீண்டும் நிதியமைச்சராக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் இந்தப் பதவிக்குக் குறி வைத்து காய் நகர்த்தி ஆரம்பித்துள்ளார்.
அதே போல ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட நிதியமைச்சர் பதவிலிருந்து விலகிய பிரணாப் முகர்ஜி மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்தப் பதவியைப் பிடிக்கவும் சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, கமல் நாத், ஆண்டனி ஆகிய மத்திய அமைச்சர்களிடையே போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications