நெருங்கும் கலிபோர்னியா தீர்ப்பு... கொடைக்கானிலிருந்து மதுரைக்கு ஓடி வந்தார் நித்தியானந்தா!

கலிபோர்னியா கோர்ட்டில் நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குவேன் என்று மதுரை ஆதீனம் வேறு அதிரடியாக பேட்டி அளித்துள்ளதால், பீதியடைந்தே நித்தியானந்தா மதுரைக்கு ஓடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை, பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளன என்று கலிபோர்னியா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதற்காக நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் நித்தியானந்தாவுக்கும் தண்டனை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை விவரம் ஜூலை 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் நித்தியானந்தா பெரும் பீதியில் உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் அதீனத்திடம் கேட்டபோது தண்டனை விதிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதையடுத்து தற்போது தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள நித்தியானந்தா அங்கிருந்து மதுரைக்கு ஓடி வந்துள்ளார். மதுரை ஆதீனத்தை சந்தித்த அவர், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
மதுரை ஆதீனம் சமீப காலமாக நித்தியானந்தா மீது அதிருப்தி அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றன. இப்படியே விட்டால் மதுரை ஆதீனம் அதிரடி முடிவுகளுக்குப் போய் விடலாம் என்ற பயத்தில்தான் மதுரைக்கு நித்தியானந்தா வந்து விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் தற்போது வாடகைக்கு இருந்து வருவோர், வசித்து வருவோர் என அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் நித்தியானந்தா இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன ஆதரவாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications