அருணாசலப் பிரதேசத்தில் பெண் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சீடு
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் இருந்து வெளிவரும் அருணாச்சல்டைம்ஸ் பத்திரிகையின் இணையாசியரியரான டோங்கம் ரினா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இடாநகரில் உள்ள தமது அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற அவர் மீது வாசலில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வாசல் அருகே படுகாயமடைந்த நிலையில் டோங்கம் ரினா மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது உடலில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அவரது நிலைமை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கேள்விபட்ட முதல்வர் நபம்து துஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரினாவை நேரில் சந்தித்தார். மேலும் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications