இலங்கை மீனவர்களால் உயிர் பிழைத்தோம்: கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர்
தூத்துக்குடி: இலங்கை மீனவர்கள் உதவியதால் தான் உயிர் பிழைத்தோம் என்று நடு்க்கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கன்னியாகுமரி லுர்து மாதா தெருவைச் சேர்ந்த ஜஹவர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 12ம் தேதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். படகில் கன்னியாகுமரி சானல் ரோட்டைச் சேர்ந்த லிப்டன், கோவளம் விபிலன், சூசை அந்தோணி, சார்லஸ், இன்னாசி, பாக்கியம், கணேஷ், மிக்கெல், உவரி பாஸ்கரன், அல்போன்ஸ் ஆகிய 10 பேர் இருந்தனர்.
அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பாததால் பதற்றமடைந்த அப்பகுதி மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் படகுகளில் கடலுக்கு சென்று தேடினர். எனினும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் படகு பழுதாகி கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு திசையில் நடுக்கடலில் தத்தளித்த அந்த 10 பேரும் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர். இது குறித்து கடலோர காவல் படையினர் மீன்துறைக்கும், கன்னியாகுமரி கலெக்டருக்கும் தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் பழுதடைந்த படகுடன் இன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில்,
கன்னியாகுமரியில் இருந்து வட கிழக்கில் சுமார் 33 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்களது படகு பழுதானது. அதனை சரி செய்ய முயன்றோம். படகில் இருந்த பேட்டரியும் சார்ஜ் இறங்கிவிட்டதால் வாக்கி டாக்கி மற்றும் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடல் நீரோட்டத்தில் காற்றடிக்கும் திசையில் படகு இழுத்துச் செல்லப்பட்டது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில படகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் அவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. தொடர்ந்து சர்வதேச கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். அப்போது எதிரே மீ்ன்பிடித்து கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்களிடம் உதவி கோரினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் மீட்கப்பட்டு உயிர் பிழைத்தோம் என்றனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications