டாஸ்மாக் கடைகளுக்கு பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: ராமதாஸ் உள்பட 2,000 பேர் கைது

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தலா 5 போலீசார் நிறுத்தப்பட்டனர்.
கடைகளுக்கு பூட்டுப் போட முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்தனர். சென்னை தி. நகரில் நடந்த போராட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் ம.பொ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு வந்து போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
மது என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழகத்தில் கடந்த 1971ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மதுக்கடைகளை திறந்து வைத்தார். அப்போது மூதறிஞர் ராஜாஜி தனது தள்ளாத வயதிலும் நேரில் சென்று மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர் சொன்னதையும் சரி, பெரியார், அண்ணா சொன்னதையும் சரி யாரும் கேட்கவில்லை.
மக்களை காப்பதா? அல்லது மதுவை விற்று மக்களை கொல்வதா? என்ற நானும் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு திராவிடக் கட்சிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள், போதைப் பொருட்களை மருத்துவத் தேவைகளைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசியல் சட்டத்தைக் கூட திராவிடக் கட்சிகள் மதிக்கவில்லை.
அனைத்து மதங்களும் மது கூடாது என்று வலியுறுத்துவதையும் கேட்கவில்லை. வருவாயை மனதில் கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் மதுக்கடைகள் மூலம் ரூ.18,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் அந்த மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் நோய் தாக்குதல்களாலும் அரசுக்கு ரூ. 1லட்சம் கோடிக்கு மேல் செலவாகிறது.
வாக்குகளைப் பெற ஆண்ட கட்சிகளும் சரி, ஆளுகின்ற கட்சிகளும் சரி மக்களுக்கு இலவசங்களை வாரிக் கொடுத்து அவர்களை ஏமாற்றுகின்றன. மதுவால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரேயடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்றால் படிப்படியாக மூடுங்கள். மும்பையில் ஒரு பகுதியைச் சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்துப் போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். அந்த சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.
மதுக்கடைகளை மூட இன்னும் 6 மாத கால அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்று வீதிக்கு வீதி வந்து போராடாமல் இரவோடு, இரவாக மதுக்கடைகளுக்குப் பூட்டு போடுவோம் என்றார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் போராட்டம் நடத்திய சுமார் 2,000 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனவைரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போன்று மாநிலம் முழுவதும் ஏராளமான பாமகவினர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
Tamil Nadu Monthly Electricity Bill System: மாதாந்திர மின் கட்டணம் எப்போது? விஜய்க்கு ராமதாஸ் கேள்வி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications