என்னது பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டா? பிசிசிஐ சவுக்கால் அடிக்கனும்....: பால்தாக்கரே ஆவேசம்
மும்பை: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் தொடங்கலாம் என்று முடிவெடுத்ததற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை பகிரங்கமாக சவுக்கால் அடிக்க வேண்டும் என்று சிவ சேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடுமையாகக் கூறியுள்ளார்.
சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலைதான் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டி தேவைதானா? இந்த முடிவுக்காக மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களான தாஜ் ஹோட்டல் முன்பும், சிஎஸ்டி ரயில் நிலையம் முன்பும் பிசிசிஐ உறுப்பினர்களை நிற்க வைத்து பொதுமக்கள் முன் சவுக்கால் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எதிர்த்துள்ளதற்கும் பால்தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications