For Daily Alerts
Just In
குடியரசுத் தலைவர் தேர்தல்: தவறுதலாக முதலில் சங்மாவுக்கு ஓட்டுப்போட்ட முலாயம்சிங்
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை வாக்களிக்க வந்தார் முலாயம்சிங் யாதவ். அப்போது அவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் டக்கென பி.ஏ.சங்மா பெயருக்கு நேராக கிளிக் செய்துவிட்டார். பின்னர் அவர் தம் தவறை உணர்ந்தவராக மற்றொரு வாக்குச் சீட்டுக் கேட்டிருக்கிறார். இதற்கு தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருக்கிறார். 2-வதாக வாங்கிய வாக்குச் சீட்டில் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கிறார் முலாயம்சிங்.
இதனிடையே குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. கனு கன்சதியா, அம்மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இன்னு என்னென்ன கூத்துகள் வெளிவரப்போகிறதோ!
Comments
English summary
Samajwadi Party (SP) supremo Mulayam Singh Yadav on Thursday mistakenly cast his vote in favour of Opposition-backed candidate PA Sangma in place of UPA nominee Pranab Mukherjee as voting began in Parliament House and state capitals for electing a new President.