கராத்தே போட்டியில் பங்கேற்க வந்த சிங்கள கராத்தே வீரர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க சிங்கள கராத்தே வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி நகரில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராம்ராஜ் வாணவராயர் நினைவு 15-வது தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிங்கள வீரர்கள் 4 பேர் பங்கேற்க வந்தனர்.
ஆனால், இலங்கை வீரர்களின் வருகைக்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து அப்படியே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications