நாகர்கோவில்: வயலில் பாய்ந்த கோவை பயணிகள் ரயில்
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோவை பயணிகள் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு மாற்றும்போது தடம்புரண்டதில் என்ஜின் வயலில் பாய்ந்தது.
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இன்று காலை 7.20 மணிக்கு கோவை பயணிகள் ரயில் புறப்பட வேண்டியிருந்தது. அதனால் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது 2வது பிளாட்பார்மில் குமரி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்ததால் கோவை ரயிலை கரியமாணிக்கபுரம் வரை உள்ள எண்ட்லைன் பகுதி வழியாக 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி ரயிலை இயக்கியபோது திடீர் என்று அது எண்ட்லைன் பகுதியை இடித்தது. இதில் ரயிலின் என்ஜின் மற்றும் தளவாடப் பொருட்கள் வைக்கும் பேக்கேஜ் பெட்டியும் வயலில் பாயந்தது. இதையடுத்து அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் கழற்றிவிட்டு வேறு என்ஜின் மூலம் ரயில் 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை பயணிகள் ரயில் 1 மணிநேரம் தாமதமாக 8.30க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் தூக்க திருவனந்தபுரத்தில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications